12 மின் திருட்டுகள் ரூ.9.64 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: அடையாறு பகுதிகளில் 12 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.9.64 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதுகுறித்து, தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள், அடையாறு பகுதியில் கூட்டு ஆய்வு செய்தபோது 12 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனால் ரூ.8,84,597 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.80,000 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 94458 57591  என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

Related Stories: