துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீசெங்கழுநீர் விநாயகர், பிடாரி அரியாத்தம்மன், வேம்புலியம்மன், செங்கணியம்மன், கங்கையம்மன் கோயிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சவுக்கு மரங்கள் மற்றும் முட்புதர்களாக காட்சி அளிக்கிறது. இங்குள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் சிலர் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு சுற்றித் திரியும் பன்றிகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைவதால் பொதுமக்கள் காய்ச்சல் பீதியில் உள்ளனர்.