சென்னை: ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, ஆவடி செக்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் படித்து வருகிறார். இவருக்கு, திருவள்ளூர் பகுதியை சேர்ந்த தோழியின் உறவினரான யுவராஜ் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில், சிறுமியின் தாய் புகார் அளித்தார்.