உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. 7 மாதங்களாகியும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் பல பகுதிகளை பிடித்துள்ள ரஷ்யா, அவற்றை தனது நாட்டுடன் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் உக்ரைன், ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்ட கைதிகள், பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டனர். இவர்களில் ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட உக்ரைன் வீரர்கள், கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர்.