ஹவானா: கியூபாவில் ஒரே பாலின திருமணங்கள் பொது வாக்கெடுப்பு மூலம் சட்டமாக்கப்பட்டுள்ளது. கியூபாவில் கம்யூனிச ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஒரே பாலின திருமணம், குழந்தைகளை தத்தெடுப்பது, வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதிப்பது தொடர்பாக ‘குடும்ப சட்டம்’ கொண்டு வந்து சட்டமாக்க தீர்மானிக்கப்பட்டது. கடந்த 2019ம் தேதி கொண்டு வரப்பட்ட இச்சட்டத்துக்கு மத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஒரே பாலின திருமணம் மற்றும் தத்தெடுப்பு சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டுமா என்று அதை சட்டமாக்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று தேர்தல் நடந்தது. 16 வயதுக்கும் மேற்பட்ட 84 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.