கொழும்பு: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜப்பானை நிரந்தர உறுப்பினராக்க இலங்கை ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், பத்து தற்காலிக உறுப்பினர்களும் உள்ளனர். ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு வீட்டோ என்ற அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிற நாடுகள் தங்கள் நாடுகள் மீது கொண்டுவரும் தீர்மானங்களை ரத்து செய்ய முடியும். இந்த அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.