சென்னை: மோடி ஆட்சியில் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே நேற்று அளித்த பேட்டி: பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். பயங்கரவாத அமைப்பினரின் சமீபத்திய பெட்ரோல் குண்டு தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. பிஎப்ஐ போன்ற அமைப்பு வேரூன்ற ஒரு சில அரசியல் கட்சிகள் அவர்களை திருப்திப்படுத்தும் கொள்கை காரணமாகும். அவர்களின் கனவுகள் ஒருபோதும் நிறைவேறாது, தகர்த்தெறியப்படும். பிரதம மோடியின் ஆட்சி உள்ளது.