சென்னை: தமிழக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: காலாண்டு தேர்வு முடிவுற்று அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைகல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30ம் தேதியன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை முதல் பருவ விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அக்டோபர் 6, 7, 8ம் தேதி ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடு செய்யப்படும்).