மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளர் ரியாஸ் பதி என்பவரை மிரட்டி பணம் பறித்தல் புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வெர்சோவா போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வெர்சோவா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.7.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரியாஸ் பதி பறித்துள்ளார். அதையடுத்து மிரட்டி பணம் பறித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரியாஸ் பதி கைது செய்யப்பட்டார்.