×

பரமக்குடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு: இளம்பெண் கைது

ராமநாதபுரம்: பரமக்குடியில் அம்சவல்லி (75) என்ற மூதாட்டியிடம் செயின் பறித்த அருணா (30) என்ற பெண் கைது செய்துள்ளனர். மூதாட்டி அம்சவல்லி பேசிக்கொண்டே அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலியை கழற்ற முயற்சித்துள்ளார். மூதாட்டி அம்சவள்ளி சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அம்சவல்லி அளித்த புகாரின் பேரில் அருணாவை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Tags : Paramakudi , Chain stolen from old lady in Paramakudi: Teen arrested
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...