சிறுமியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஆவடி செக்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கும் தலக்காஞ்சேரி பகுதியை சேர்ந்த தோழியின் உறவினரான யுவராஜ் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ‘’ ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று யுவராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்’’ என்று தெரியவந்தது. இதையடுத்து யுவராஜை கைது செய்து விசாரித்தபோது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதன்பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து யுவராஜை கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: