திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தனியார் காலனி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலனி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு தொழிற்சாலையில் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.