சியோல்: தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பலியாகினர். தலைநகர் சியோலை அடுத்துள்ள டேஜியான் என்ற நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் தரைத்தளத்தில் கார்களை நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ காற்று பலமாக வீசியதால் மற்ற தளங்களுக்கும் மளமளவென பரவியது. விபத்து குறித்து தகவல் அறிந்த சியோல் மற்றும் டேஜியான் நகர தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். வளாகத்தில் சிக்கி இருந்த ஏராளமானோரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி கட்டிடத்தில் இருந்து வெளியேற்றினர்.