சென்னை: கொல்கத்தா செல்ல வந்த மேற்குவங்க பெண், சென்னை விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் நிர்மலா பசாரி (68). இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் இவரது மகன் விஜெய் பசாரி, தாயை மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்மலா பசாரி சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நிர்மலா பசாரி சிகிச்சை முடிந்து நேற்று மதியம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் தனியார் பயணிகள் விமானத்தில், சொந்த ஊர் திரும்ப மகன் விஜெய் பசாரி, தாயை அழைத்துக்கொண்டு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அங்கு பாதுகாப்பு சோதனை நடக்கும் பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.