வாஷிங்டன்: ``தீவிரவாதத்தை ஒடுக்கவே பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானங்களை வழங்கியதாக சொல்லி யாரையும் முட்டாளாக்காதீங்க,’’ என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று அமெரிக்கா எப்-16 போர் விமானங்களை கடந்த 1983ம் ஆண்டு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குவதால், அந்நாட்டிற்கான ராணுவ நிதிக்கு டிரம்ப் தடை விதித்தார். தற்போதைய அதிபர் பைடன் அந்த தடை உத்தரவை கடந்த 8ம் தேதி ரத்து செய்தார். இதையடுத்து, எப்-16 விமானங்களை மேம்படுத்த ரூ.3,600 கோடி நிதி வழங்குவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.