புதுடெல்லி: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தை தசரா விடுமுறைக்கு பின்னர் விரிவாக விசாரிப்பதாக கூறி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளி தாளாளர் உட்பட 4 பேருக்கு கடந்த மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.