துபாய்: டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் முன்னிலையை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த கடைசி டி20 போட்டியில், 187 ரன்களை துரத்திய இந்தியா 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. கோஹ்லி 63 ரன் (48 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), சூரியகுமார் 69 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), ஹர்திக் 25* ரன் விளாசி வெற்றிக்கு உதவினர்.