திருவனந்தபுரம்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி, திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்க வீரர்கள் நேற்று முன்தினமும், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் நேற்று மாலையும் திருவனந்தபுரம் வந்தனர். அவர்களுக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.