புதுடெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தன்னுடைய தனிப்பட்ட சட்டப்பிரிவு 142 அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்த நிலையில், வழக்கில் குற்றவாளியாக இருக்கும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தனர்.