வத்தலக்குண்டு அருகே கோயிலில் விரைந்து கோபுரம் கட்ட வலியுறுத்தல்

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கோபுரம் அமைக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கியது. அந்தப் பணி தற்போது பாதியில் நிற்கிறது. எனவே கோயிலில் விரைந்து கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: