சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெத்தசிகரளப்பள்ளி ஊராட்சி குரல்தொட்டி கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் குரல்தொட்டி, தின்னூர், சிள்னதின்னூர் பாப்பனப்பள்ளி, கார்பாலா, ஆறுப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும். இதனால் விவசாயம் செழிக்கும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக சரிவர மழை இல்லாததால் இந்த ஏரி வறண்டு கிடந்தது.