திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டையை பசுமையாக்குவதாக கூறி அரசுப்பணம் 50 லட்சம் ரூபாயை விரையமாக்கிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது திண்டுக்கல் மலைக்கோட்டை மீது பல்வேறு விதமான மரங்களை நட்டு அதனை சொட்டுநீர் பாசனம் மூலம் வளர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அத்தி, அரசு, இச்சி, கல் இச்சி உள்ளிட்ட மரங்களை அப்போதைய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நட்டார். ஆனால் அதன்பிறகு அதனை வளர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.