பெங்களூரு: விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பெங்களூர் விமானப்படை பயிற்சி கல்லூரியின் 6 விமானப்படை அதிகாரிகள் மீது, கர்நாடகா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுடெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த அங்கிங் குமார் ஜா என்ற இளைஞர், விமானப்படைக்கு தேர்வானதை அடுத்து, பெங்களூரூ விமானப் படை பயிற்சி கல்லுாரியில், பயிற்சி வீரராக இருந்து வந்தார். அங்கிங் குமார் ஜா, பயிற்சியின்போது விதிமுறைகளை மீறியதாகக் கூறி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 21ம் தேதி பெங்களூரு விமானப்படை பயிற்சி கல்லூரியில் உள்ள விடுதி அறையில், அங்கிங் குமார் ஜா துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.