சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் விதித்து தீர்ப்பளித்தது போக்சோ நீதிமன்றம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர் ஷாகிதா பானு,  அவருக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் ,நாகராஜ், மாரீஸ்வரன் ,பொன்ராஜ் ,மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வெங்கட்ராமன் , ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக் , திரிபுராவை சேர்ந்த தெபாசிஸ் நாமா  உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 4 பேர் தலைமறைவாகினர். இதையடுத்து தலைமறைவான 4 பேருக்கு எதிரான வழக்கை தனியாக பிரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் மீதமுள்ள 22 பேருக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்தது. இந்த விசாரணையின் போது, வழக்கில் தொடர்புடைய மாரீஸ்வரன் என்பவர் மரணமடைந்தார். இதையடுத்து மீதமுள்ள 21 பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, கடந்த 15ம் தேதி இந்த வழக்கிற்கான தீர்ப்பினை வழங்கினார். அதில், 22 பேரில் 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது.

அதில் சிறுமியின் உறவினர்களான முதல் 8 எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் அனைவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து குற்றவாளிகள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

Related Stories: