பொள்ளாச்சியில் இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது..!!

கோவை: கோவை பொள்ளாச்சியில் இந்து முன்னணி நிர்வாகியின் கார், ஆட்டோ தாக்குதல் வழக்கில் PFI அமைப்பு நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்ட மேற்கு காவல் நிலைய சரகத்தில் கடந்த செப்.22ம் தேதி குமரன் நகரில் அமைந்துள்ள இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 நான்கு சக்கர வாகனம் 2 ஆட்டோ மற்றும் 1 டாட்டா ஏசி வாகனத்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியும் மேற்படி 2 வாகனங்களின் மீது டீசல் திரவத்தை ஊற்றியும் உள்ளனர். இது சம்மந்தமாக பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை விரைந்து கைது செய்யும் பொருட்டு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், உத்தரவின் பேரில், கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி மேற்பார்வையில், மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வழிகாட்டுதலின் பேரிலும், பொள்ளாச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் செல்வி.தீபா சுஜாதா தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை  செய்தும், அப்பகுதியில் உள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் 500-க்கும் மேற்பட்ட நபர்களின் அலைபேசி எண்களை ஆய்வு செய்தும் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து விசாரணை மேற்கொண்டதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சியை சேர்ந்த ஜமால் மைஜதீன் என்பவருடைய மகன் முகமது ரபிக்(26), பொள்ளாச்சியை சேர்ந்த மகாத்மாகாந்தி வீதியை சேர்ந்த அக்பர் என்பவரது மகன் ரமீஸ் ராஜா (36) மற்றும் இசாக் என்பவருடைய மகன் மாலிக்(எ)சாதிக் பாஷா(32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: