டெல்லி: நளினி விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. தங்களை விடுவிக்கக் கோரி ரவிச்சந்திரன் மற்றும் நளினி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு அக்.10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.