சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.துறை சார்ந்த அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் சவால்களை திறம்பட கையாளுவது குறித்தும் பேசப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.