பெரம்பூர்: வியாசர்பாடி, பி-கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் விக்கி (19). பாரிமுனையில் ஒரு தனியார் கடையில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இன்பரசன் என்பவரது மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இன்பரசனின் மனைவி, தனது செல்போன் எண்ணை விக்கியிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இன்பரசன் மனைவியின் செல்போனுக்கு விக்கி மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை பார்த்த இன்பரசன், விக்கியை செல்போனில் தொடர்புகொண்டு, ‘‘இந்த நேரத்தில் எதற்கு எனது மனைவிக்கு மெசேஜ் அனுப்புகிறாய்’’, என்று கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.