சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து விமானங்கள் மூலம் அமெரிக்க டாலர் கடத்த முயன்ற 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம் 24ந் தேதி இரவு புறப்பட இருந்தது. அப்போது சுங்கத்துறையினர் பயணிகளை சோதனை செய்து அனுப்பி வந்தனர். அதில், சென்னையை சேர்ந்த 2 பேர் உள்ளாடைகளில் 20,400 அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.