பல்லாவரம்: பம்மல், தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் ஞான செல்வன் (31). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வகிதா (28). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக ஞானசெல்வம் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாக கூறப்படுகிறது. தினசரி இரவு முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். மாதம்தோறும் வாங்கும் சம்பளம் முழுவதையும் இதில் இழந்துள்ளார். இதனை மனைவி வகிதா கண்டித்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில தினங்களாக வகிதா கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினமும் வழக்கம் போல் ஞானசெல்வன் ஆன்லைன் ரம்மியில் ரூ.1000 இழந்துள்ளார்.