ரயில் மோதி மூதாட்டி பலி

சென்னை: பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க முதாட்டி ஒருவர் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் அங்குள்ள மீன் சந்தைக்கு செல்ல  தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு நோக்கி வந்த மின்சார ரயிலில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து இறந்த மூதாட்டி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: