ஆந்திராவிலிருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற 2 பேர் கைது

பெரம்பூர்: பெரம்பூர் ராமசாமி தெருவில் ஒரு வீட்டில்  கஞ்சா விற்பதாக செம்பியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த வீட்டில் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு, சிறுசிறு பொட்டலங்களாக பிரித்து கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது. இதுதொடர்பாக, பரத் (எ) ஆலி (26) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் பெரம்பூர் வாஞ்சிநாதன் தெருவில் உள்ள மதன் (24) என்பவரின் வீட்டை போலீசார் சோதனை செய்து, அங்கிருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும், ஆந்திராவில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, பெரம்பூர் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: