பெரம்பூர்: பெரம்பூர் ராமசாமி தெருவில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக செம்பியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த வீட்டில் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு, சிறுசிறு பொட்டலங்களாக பிரித்து கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது. இதுதொடர்பாக, பரத் (எ) ஆலி (26) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.