திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை கே.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (32). சினிமாவில் உதவி இயக்குனராக வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். இவர், கடந்த 23ம் தேதி திரைப்படம் தொடர்பாக திருவொற்றியூரில் உள்ள தனது நண்பரை பார்க்க ஆட்டோவில் புறப்பட்டார். புதுவண்ணாரப்பேட்டை அரசு பள்ளி அருகே வந்தபோது, முன்னால் மொபட்டில் சென்ற பெண் ஒருவர், தனது பையை கீழே தவறவிட்டுள்ளார். இதைபார்த்த மூர்த்தி, அந்த பையை எடுத்துகொண்டு தவறவிட்ட பெண்ணின் மொபட்டை பின்தொடர்ந்து செல்லும்படிகூறி சென்றுள்ளார்.