சென்னை,: புதுப்பேட்டை சியாணி தெருவை சேர்ந்தவர் கில்டர்ஸ் (50). இவர் நேற்று முன்தினம் மாலை எழும்பூர் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கத்தி முனையில் மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் கில்டர்ஸ் புகார் அளித்தார். அதேபோல், பல்லவன் சாலையை சேர்ந்த ெசந்தில்குமார் (42) நேற்று முன்தினம் இரவு எழும்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலில் அவரது செல்போன் மாயமானது. இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அடுத்தடுத்து வந்த புகாரை தொடர்ந்து எழும்பூர் போலீசார் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.