சென்னை: சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, இரவு நேரங்களில் மாநகரம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று அதிகாலை எழும்பூர் போலீசார் எழும்பூர் ரவுண்டானா அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மூட்டை மூட்டையாக மலேசிய நாட்டின் நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. உடனே மினி வேனில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.