ஜெய்ப்பூர்: புதிய சிவிங்கி புலிகளால் ராஜஸ்தான் சுற்றுலாவிலும் பல்வேறு அதிசயங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி கடந்த 17ம் தேதி திறந்து விட்டார். இவற்றை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆர்வம், சுற்றுலா பயணிகளிடம் மேலோங்கி வருகிறது. ஆனால், இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள இந்த சிவிங்கி புலிகளுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், இப்போதைக்கு சுற்றுலா பயணிகள் அதை காண அனுமதிக்கப்படவில்லை. இந்த சிவிங்கி புலிகளின் நடமாட்டத்தை சிறப்பு குழு கண்காணித்து வருகிறது. அதில் கிடைக்கும் முடிவுகளை பொருத்து, அவற்றை பார்வையிட பொதுமக்களை அனுமதிப்பது பற்றி முடிவு செய்யப்பட உள்ளது.