லண்டன்: கருவில் இருக்கும் போதே குழந்தைகள் சங்கீதத்தை ரசிக்கின்றன. தாயின் இன்ப, துன்பத்தையும் தனது அசைவுகள் மூலம் பிரதிபலிக்கின்றன. இதனால், கருவில் இருக்கும் போதே குழந்தைகளுக்கு இப்போதுள்ள பெண்கள், பாடம் எடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில், கருவில் வளரும் போதே இனிப்பு, கசப்புகளை குழந்தைகள் ருசித்து, அதற்கேற்ற முகபாவனைகளை காட்டுகின்றன என்பதை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். கருவுற்ற 100 பெண்களை தேர்வு செய்த விஞ்ஞானிகள், அவர்களை 2 பிரிவாக பிரித்தனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு கேரட் சுவை அடங்கிய கேப்சூல் மாத்திரையையும், மற்றவர்களுக்கு பரட்டைக் கீரையின் சுவை அடங்கிய கேப்சூல் மாத்திரையையும் வழங்கினர்.