உன்னாவ்: உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பனியா கெரா கிராமத்தில் பஜ்ரங்கி (55) என்ற சாமியார் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் வாகனங்களுக்கு பஞ்சர் பழுதுபார்க்கும் கடை நடத்தி வரும் சுபேதார் என்பவரின் கடையில் விஷத்தன்மை கொண்ட கருநாகப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாம்பை சுபேதார் கட்டையால் தாக்கி கொல்ல முயன்றார். அங்கு வந்த சாமியார் பஜ்ரங்கி, ‘பாம்பை கொல்ல வேண்டாம்’ என்று சுபேதாரை வற்புறுத்தினார். பின்னர், அந்த பாம்பை லாவகமாக பிடித்த சாமியார் பஜரங்கி, ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு சென்றார். இவர் சமூக வலைதளங்களில் ‘ரீல்’ வீடியோ வெளியிடும் ஆர்வமுள்ளவர் என்பதால், இந்த பாம்பை காட்டி அவ்வப்போது ‘ரீல்’ வீடியோ வெளியிட்டு வந்தார்.