செய்முறை:
தினை அரிசியை வறுத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய்யை இட்டு பூண்டு, காளான், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மரக்கறி ஸ்டாக், தண்ணீர், தேவையானளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின்னர் சிறியளவு சூப் கலவையை அரைத்து எடுத்து ஆறவைத்து மீண்டும் மீதமுள்ள சூப் கலவையில் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் வெந்த அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் பத்து நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும். பின்னர் தேவையானளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.