சென்னை, திருவள்ளூர், காஞ்சி உள்பட 16 மாவட்டங்களுக்கான திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களுக்கான திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 19 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. 2வது நாளான 23ம் தேதி 21 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. 3வது நாளான நேற்று புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை), நாகை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்தி ஆகிய 16 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது.

இந்த நிலையில் 4வது நாளான இன்று வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை), வேலூர் மத்திய, வேலூர்  மேற்கு(திருப்பத்தூர்), திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,  காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர்  மேற்கு, திருவள்ளூர் மத்திய, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை  கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்கள் என  16 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்தது. இதில் அமைச்சர்கள், தற்போதைய மாவட்ட செயலாளர், முக்கிய நிர்வாகிகள் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இதனால், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கூட்டம் இன்று அதிகமாக காணப்பட்டது. திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதற்கான மாவட்ட செயலாளர் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிருக்கும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும். இல்லாத பட்சத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை திமுக தலைமை கழகம் வெளியிடும்.

Related Stories: