சென்னை: காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி தெரிவித்துள்ளது. காந்தி ஜெயந்தி வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி வருகின்ற ஆக்டொபர் 2-ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளது.
குறைவெண் வரம்பின் படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, வட கிழக்கு பருவமழை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுதலை தடுக்கும் வகையில் விவாதித்தல் உள்ளிட்டவை குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.