ஜெனிவா: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 4777 பேருக்கு கொரோனா ஊறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,68,114 ஆக அதிகரித்துள்ளது. தற்பொழுது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 44,436-ல் இருந்து 43,994 ஆக குறைந்துள்ளது. நாடு மழுவதும் மேலும் 23 பேர் இருந்ததால் பலி எண்ணிக்கை 5,28,510 ஆகி உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.