கொரோனாவுக்கு உலக அளவில் 6,539,682 பேர் பலி: சுகாதுரைத்துறை தகவல்

ஜெனிவா: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 4777 பேருக்கு கொரோனா ஊறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,68,114 ஆக அதிகரித்துள்ளது. தற்பொழுது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 44,436-ல் இருந்து 43,994 ஆக குறைந்துள்ளது. நாடு மழுவதும் மேலும் 23 பேர் இருந்ததால் பலி எண்ணிக்கை 5,28,510 ஆகி உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.39 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,539,682பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 619,952,013 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 599,820,175 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,956 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: