பெரம்பூர்: தமிழகத்தில் கொள்கை ரீதியாக திராவிட மாடல் ஆட்சியை செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார். சென்னை கிழக்கு மாவட்டம், வில்லிவாக்கம் கிழக்கு பகுதி திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா, திராவிடர் திருவிழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை அயன்புரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகே நடந்தது. வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளர் வாசு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன், செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ வெற்றிஅழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் தற்போது திராவிடர் ஆட்சி நடந்து வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவரையும் கொள்கை ரீதியாக வலுவாக பிடித்துதான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது திராவிட மாடல் ஆட்சியை செய்து வருகிறார்’’ என்றார்.