சியோல்: கொரியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், யெலனா ஆஸ்டபென்கோ - எகடரினா அலெக்சாண்ட்ரோவா இன்று மோதுகின்றனர். அரையிறுதியில் இங்கிலாந்தின் எம்மா ரடுகானுவுடன் (19 வயது, 77வது ரேங்க்) மோதிய முதல்நிலை வீராங்கனை ஆஸ்டபென்கோ (25 வயது, லாத்வியா) முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்து பின்தங்கினார். எனினும், 2வது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ஆஸ்டபென்கோ 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. 3வது செட்டில் ஆஸ்டபென்கோ 3-0 என முன்னிலை வகித்தபோது ரடுகானு காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார். இதையடுத்து ஆஸ்டபென்கோ இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.