புதுடெல்லி: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்குள் பாஜ எம்எல்ஏ.க்கள் குட்காவை சாப்பிடுவதும், செல்போனில் சீட்டு விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் எம்எல்ஏ.க்களை யாரும் சோதனையிடுவது கிடையாது. எந்த பொருட்கள் வேண்டுமென்றாலும் அவர்கள் கொண்டு செல்லலாம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில், பாஜ எம்எல்ஏ ரவி சர்மா என்பவர் சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது குட்காவை எடுத்து சாப்பிடுகிறார். இவரின் இந்த செயலை சட்டப்பேரவைக்கு உள்ளேயே ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.