இறால் கிரீன் மசாலா

செய்முறை:

இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து ஊற வைத்துக் கொள்ளவும். மிக்சியில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி தழை, மிளகாய், கொத்தமல்லி தூள், சீரகத்தூள் போன்றவற்றை கொட்டி விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். அதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த கலவையை கொட்டி கிளறவும். பின்னர் அடுப்பை சிறுதீயில் வைத்து விட்டு தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதிக்க தொடங்கியதும் இறால் கலவையை கொட்டி உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வரும் வரை வேக வைத்து விட்டு இறக்கி பரிமாறலாம். சுவையான இறால் கிரீன் மசாலா ரெடி.

Related Stories: