சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை காரணமாக ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்தவர்களில் நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்படுகிறவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், சென்னை புழல் சிறையில் 2 பெண் கைதிகள் உட்பட 15 பேர், வேலூரில் 2, கடலூரில் 5, சேலம் 1, கோவை, திருச்சியில் தலா 12, மதுரையில் 22, புதுக்கோட்டையில் 4, சென்னை புழல் மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் தலா 2 என 75 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.