திருத்தணி: கோவை பாஜ பிரமுகர் கடை மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதன்காரணமாக பதற்றம்ஏற்பட்டுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உளவுத்துறையின் எச்சரிக்கையின்படி, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.