ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் மனோஜ் குமார். கேணிக்கரை பகுதியில் உள்ள இவரது கிளினிக் வளாகத்தில் நிறுத்தியிருந்த இரண்டு கார்களுக்கு மர்மநபர்கள் நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி சென்றனர். இதில் கார்கள் எரிந்து சேதமடைந்தன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.