சென்னை: மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ப.சிதம்பரம்; மதுரை ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்?